ஸ்ரீ ஜினாய நம • ஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையம் • PONNUR MALAIShri Jinaya Namah • Sri Vishakhacharya Tapo Nilayam • PONNUR MALAI+91-9444138289 / +91-8148318725
ஸ்ரீ ஜினாய நமShri Jinaya Namah
Shri Jinaya Namah

ஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையம்

Sri Vishakhacharya Tapo Nilayam

PONNUR MALAI

ஜின தர்மத்தின் அறக்கருத்துகள், ஆன்மிகப் பயிற்சி, ஸ்வாத்யாயம், பூஜை, தர்மப் பிரவசனம் மற்றும் பல்வேறு அறப்பணிகளை ஒருங்கிணைத்து செயல்படும் ஆன்மிகத் தலம்.

A spiritual centre dedicated to the ethical teachings of Jain Dharma, spiritual practice, Svadhyaya, worship, Dharma discourses, education and compassionate service.

TAPO NILAYAM • PONNUR MALAI
எங்களைப் பற்றிAbout Us
About Us

ஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையம் – பொன்னூர் மலை

Sri Vishakhacharya Tapo Nilayam – Ponnur Malai

ஸ்ரீ ஜினாய நம

Shri Jinaya Namah

Ponnur Malai
Tapo Nilayam

ஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையம், ஜின தர்மத்தின் அறக்கருத்துகளை மக்களிடையே பரப்புதல், ஆன்மிகப் பயிற்சி மற்றும் ஸ்வாத்யாயத்தை வளர்த்தல், பூஜை, தர்மப் பிரவசனம் மற்றும் பல்வேறு அறப்பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய நோக்கங்களுடன் செயல்பட்டு வருகிறது.

Sri Vishakhacharya Tapo Nilayam functions with the objectives of spreading the ethical teachings of Jain Dharma among people, encouraging spiritual practice and Svadhyaya, conducting worship and Dharma discourses, and undertaking various charitable activities.

வரலாறுHistory
History

தபோ நிலையத்தின் வரலாறு

History of Tapo Nilayam

1995

1995ஆம் ஆண்டு, சந்த சிரோண்மணி ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாஸாகர் மகராஜ் அவர்களின் நல்சீடர் ஸ்ரீ 108 ஆர்ஜவஸாகர் மகராஜ் அவர்கள் தமிழக விஜயம் செய்தார்.

In 1995, Sri 108 Arjavasagar Maharaj, a devoted disciple of Acharya Sri 108 Vidyasagar Maharaj, visited Tamil Nadu.

தமிழகத்தில் சமணர்கள் வாழும் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குச் சென்று, அங்குள்ள கற்கோயில்கள் மற்றும் ஜினாலயங்களை தரிசனம் செய்தார். செல்லும் கிராமங்கள் தோறும் சிராவகர்களுக்கும் பெரியவர்களுக்கும் தர்ம உபதேசம் செய்தார்.

In 1995, Sri 108 Arjavasagar Maharaj, a devoted disciple of Acharya Sri 108 Vidyasagar Maharaj, visited Tamil Nadu.

He travelled to villages and towns where Jains lived, visited the rock temples and Jinalayas there, and gave Dharma teachings to Shravakas and elders in the villages he visited.

சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான கல்வி
Education for Children and Adults

சிறுவர்களுக்காக மஹாவீரர் பெயரில் பாடசாலைகள் தொடங்கி, அறக்கல்வி வழங்க ஏற்பாடு செய்தார்.

Schools in the name of Mahavira were started for children, with arrangements to provide ethical education.

பெரியவர்களுக்காக 4 ஆண்டு பாடத்திட்டமும், சிறுவர்களுக்காக 5 ஆண்டு பாடத்திட்டமும் வகுக்கப்பட்டு, ஜின தர்மம் பரப்பப்பட்டது. பயின்றவர்களுக்கு பட்டமும் வழங்கப்பட்டது. இதற்காக பல்வேறு நூல்களும் வெளியிடப்பட்டன.

Schools in the name of Mahavira were started for children, with arrangements to provide ethical education.

A four-year curriculum for adults and a five-year curriculum for children were framed, and Jain Dharma was taught. Certificates were also given to those who completed the studies. Various books were published for this purpose.

சேவாதளம் மற்றும் அமைப்பு உருவாக்கம்
Formation of the Sevadalam and Organisation

இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒரு அமைப்பு தேவை என்ற எண்ணத்தின் அடிப்படையில், ஸ்ரீ சுருதகேவலி பத்ரபாகு சுவாமி சேவாதளம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, ஆர்வலர்களுடன் இணைந்து பல்வேறு சேவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

With the idea that an organisation was needed to carry out these activities, Sri Srutakevali Bhadra Bahu Swami Sevadalam was formed, and various service activities were undertaken together with volunteers.

தானே சுயமாகத் தன் கைகளால் பூஜை செய்யவும், ஸ்வாத்யாயம் செய்யவும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.

He encouraged people to perform worship themselves with their own hands and to practise Svadhyaya.

இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து நிரந்தரமாக செயல்படுத்த ஒரு அமைப்பு தேவை என்ற நோக்கில், ஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையம் என்ற பெயரில் அமைப்பு பதிவு செய்யப்பட்டு, 18.01.1998 அன்று தொடங்கப்பட்டது.

With the idea that an organisation was needed to undertake these activities, Sri Srutakevali Bhadrapagu Swami Sevadalam was formed, and various service activities were carried out with volunteers.

A habit of personally performing worship and undertaking Svadhyaya was encouraged.

With the objective of coordinating these activities and continuing them permanently, an organisation named Sri Vishakhacharya Tapo Nilayam was registered and commenced on 18.01.1998.

தபோ நிலையம் அமைந்த இடம்
Location of Tapo Nilayam

நிரந்தரமாக ஒரு இடத்தில் இவ்வமைப்பு செயல்பட வேண்டும் என்ற நோக்கில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தக்கண்டராயபுரம் கிராமம், கீழ்நந்திநயம்பாடி சாலையில் இடம் வாங்கப்பட்டது.

With the aim of having the organisation function permanently from one location, land was purchased on Keel Nandhinayambadi Road, Thakkandarayanpuram Village, Vandavasi Taluk, Tiruvannamalai District.

அங்கு கட்டிடங்கள் அமைக்கப்பட்டு தபோ நிலையம் செயல்படத் தொடங்கியது.

With the objective of having the organisation function permanently from one location, land was purchased on Keezhnandhinayampadi Road in Thakkandarayanpuram village, Vandavasi Taluk, Tiruvannamalai District.

Buildings were constructed there and Tapo Nilayam began its activities.

ஆன்மிகம் & கல்விSpiritual & Education
Spiritual & Education

ஆன்மிகம், கல்வி மற்றும் அறப்பணிகள்

Spiritual, Educational & Service Activities

ஸ்ரீ அஜிதநாதர் ஜினாலயம்

Sri Ajithanathar Jinalaya

1999ஆம் ஆண்டு ஸ்ரீ அஜிதநாதர் ஜினாலயம் கட்டப்பட்டது.

Sri Ajithanathar Jinalaya was built in 1999.

தபோ நிலைய வளாகத்தில் ஆதிநாதர் கோயில், சாந்திநாதருக்கான தனிக் கோயில் மற்றும் குந்தகுந்தர் சிலை உள்ளிட்ட ஆன்மிகச் சிறப்புகள் அமைந்துள்ளன.

The Tapo Nilayam campus includes the Adinathar Temple, a separate temple for Shanthinathar and a statue of Kundakundar, along with other spiritual features.

முக்கால தீர்த்தங்கரர்கள் தொடர்பான சமண மரபு மற்றும் தத்துவப் பின்னணியும் இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.

Sri Ajithanathar Jinalaya was built in 1999.

The Tapo Nilayam campus has spiritual features including the Adinathar temple, a separate temple for Shanthinathar and a statue of Kundakundar.

Jain tradition and philosophical background associated with the three eras of Tirthankaras are also among the special features of this place.

ஸ்ரீ வித்யாஸாகர் கோசாலை

Sri Vidyasagar Gosala

1998ஆம் ஆண்டு பசுக்கள் காப்பகம் தொடங்கப்பட்டது.

The Gosala was started in 1998.

ஸ்ரீ வித்யாஸாகர் பெயரில் இக்கோசாலை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

This Gosala continues to be maintained in the name of Sri Vidyasagar.

தற்போது 50க்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் காளைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

The Gosala was started in 1998 and continues to be maintained in the name of Sri Vidyasagar.

More than 50 cows and bulls are currently cared for here.

கல்விப் பணிகள்

Educational Activities

தபோ நிலையத்தின் மூலம் குருகுலம் தொடங்கப்பட்டது.

A Gurukulam was started through Tapo Nilayam.

பின்னர் ஸ்ரீ மஹாவீர் உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டது.

Later, Sri Mahavir Residential School was started and functioned for more than 15 years.

சமண மாணவர்களுக்காக விடுமுறை காலங்களில் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Training classes and seminars are conducted during holidays for Jain students.

வெளியூரிலிருந்து குழுவாக வந்து தங்கி, ஜின தர்மம் மற்றும் தத்துவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

A Gurukulam was started through Tapo Nilayam.

Later, Sri Mahavir Residential School was started and functioned for more than 15 years.

Training classes and seminars are conducted during holidays for Jain students.

Facilities have also been arranged for groups from outside to stay and undertake Jain Dharma and philosophical training.

நூல் வெளியீடுகள்

Book Publications

குந்தகுந்தரின் நூல்கள், சமயசாரம், பிரவசனசாரம், நியமசாரம், பஞ்சாஸ்திகாயம், அஷ்டபாகுடம் உள்ளிட்ட பல்வேறு சமண நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.

The works of Kundakundar and various Jain texts, including Samayasara, Pravachanasara, Niyamasara, Panchastikaya and Ashtapahuda, have been translated and published in Tamil.

மேலும், ஜின தர்மம் தொடர்பான அறக்கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் “ஸ்ரீ சுருதகேவலி” என்ற மாதப் பத்திரிகையும் நடத்தப்பட்டு வந்தது.

Works of Kundakundar and various Jain texts, including Samayasara, Pravachanasara, Niyamasara, Panchastikaya and Ashtapahuda, have been translated and published in Tamil.

The monthly magazine “Sri Srutakevali” was also conducted to take the ethical teachings of Jain Dharma to the people.

விரதிகள் சேவை

Service for Vratis

தசலஷணம், ஆஷ்டானிகம், சோடசகாரணம் போன்ற பருவ நாட்களில் விரதிகள் தபோ நிலையத்திற்கு வந்து தங்கி, பூஜை மற்றும் விதானங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

During observances such as Dasalakshana, Ashtanika and Shodashakarana, Vratis come to Tapo Nilayam, stay here, and undertake worship and Vidhana.

அவர்களுக்கு சுத்த ஆகாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Arrangements have been made to provide them with pure food.

மேலும், 50க்கும் மேற்பட்ட நபர்கள் தேச விரதிகளாக (பிரதிமாதாரிகளாக) இருந்து தங்களது ஆன்ம நலனைப் பேணி வருகின்றனர்.

During periods such as Dasalakshana, Ashtanika and Shodashakarana, Vratis stay at Tapo Nilayam and undertake worship and Vidhana.

Arrangements have been made to provide them pure food.

More than 50 persons are also observing Desha Vratas (Pratimadharis) for their spiritual welfare.

மருத்துவ சேவை

Medical Service

சுற்றுப்புற கிராம மக்களின் நலனுக்காக சித்த மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ சேவை வழங்கப்பட்டு வந்தது.

Medical service based on Siddha medicine had been provided for the welfare of people in surrounding villages.

உதாசீள ஆசிரமம்

Udhaseela Ashram

தபோ நிலையத்தின் ஆன்மிகச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக உதாசீள ஆசிரமம் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

Udhaseela Ashram has been established and maintained as part of the spiritual activities of Tapo Nilayam.

இன்றைய தபோ நிலையம்Today / Tapo Nilayam
Today / Tapo Nilayam

இன்றைய தபோ நிலையம்

Tapo Nilayam Today

இன்று ஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையம் பல்வேறு ஆன்மிக, கல்வி மற்றும் அறப்பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது.

Today, Sri Vishakhacharya Tapo Nilayam coordinates a range of spiritual, educational and charitable activities.

ஜின தர்மப் பரப்புரைPropagation of Jain Dharmaஆன்மிகப் பயிற்சிSpiritual Practiceஸ்வாத்யாயம்SvadhyayaபூஜைWorshipதர்மப் பிரவசனம்Dharma Discoursesவிரதிகள் சேவைVrati Serviceஅன்னதானம்AnnadanamகோசாலைGosalaகல்விப் பணிEducationநூலகம்Libraryதத்துவப் பயிற்சிPhilosophical Trainingமருத்துவ சேவைMedical Service
நூலகம்Jain Library
Jain Library

நூலகம்

Jain Library

ஸ்ரீ ஜினாய நம

Shri Jinaya Namah

Jain Library
5,000+ Books

📚 5,000-க்கும் மேற்பட்ட நூல்கள்

📚 More than 5,000 Books

நூலகத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 5,000 நூல்கள் உள்ளன.

The library contains around 5,000 books in Tamil, English and Hindi.

ஜின தர்மம், தத்துவம், ஆன்மிகம் மற்றும் சமண மரபு தொடர்பான பல்வேறு நூல்களை இங்கு பயிலலாம்.

The library has around 5,000 books in Tamil, English and Hindi.

A wide range of books on Jain Dharma, philosophy, spirituality and Jain tradition can be studied here.

📖 முக்கிய தத்துவ நூல்கள்

📖 Important Philosophical Works

குந்தகுந்தரின் முக்கிய நூல்கள் உள்ளிட்ட பல ஜின தர்ம நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

Many Jain Dharma works, including important works of Kundakundar, have been translated and published in Tamil.

குறிப்பாக:

In particular:

சமயசாரம் • பிரவசனசாரம் • நியமசாரம் • பஞ்சாஸ்திகாயம் • அஷ்டபாகுடம் • மேலும் பல ஜின தர்மம் மற்றும் தத்துவ நூல்கள்

Several Jain Dharma works, including major works of Kundakundar, have been translated and published in Tamil.

In particular: Samayasara • Pravachanasara • Niyamasara • Panchastikaya • Ashtapahuda • and many other Jain Dharma and philosophical works.

🎓 மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு

🎓 For Students and Researchers

ஜின தர்மம் மற்றும் தத்துவம் தொடர்பாகப் பயிலும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் Ph.D. மாணவர்களுக்கு தேவையான நூல்கள் மற்றும் தத்துவ விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.

Students, researchers and Ph.D. scholars studying Jain Dharma and philosophy are provided with required books and philosophical explanations.

🧑‍🏫 தத்துவப் பயிற்சிக்கான ஆதாரம்

🧑‍🏫 A Resource for Philosophical Training

தபோ நிலையத்தில் நடைபெறும் தத்துவப் பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் ஆன்மிக வகுப்புகளுக்கு நூலகம் ஒரு முக்கியமான அறிவு வளமாக விளங்குகிறது.

The library is an important knowledge resource for the philosophical training, seminars and spiritual classes conducted at Tapo Nilayam.

வெளியூரிலிருந்து குழுவாக வந்து தங்கி தத்துவப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் இந்த நூலகம் பயனுள்ளதாக உள்ளது.

The library is an important knowledge resource for philosophical training, seminars and spiritual classes held at Tapo Nilayam.

It is also useful for groups coming from outside, staying here and undertaking philosophical training.

🌿 அறிவும் ஆன்மிகமும்

🌿 Knowledge and Spirituality

“படித்தல் – சிந்தித்தல் – புரிதல் – நடைமுறைப்படுத்தல்”

“Reading – Reflection – Understanding – Practice”

என்ற அடிப்படையில் ஜின தர்ம அறிவையும் தத்துவ சிந்தனையையும் வளர்க்கும் நோக்கில் நூலகம் செயல்பட்டு வருகிறது.

The library functions with the aim of developing knowledge of Jain Dharma and philosophical thinking based on these principles.

ஜின தர்ம அறிவைத் தேடுவோருக்கு — ஒரு சிறந்த அறிவுக் களஞ்சியம்.

The library functions with the aim of developing knowledge of Jain Dharma and philosophical thinking based on “Reading – Reflection – Understanding – Practice”.

It is a valuable knowledge resource for those seeking knowledge of Jain Dharma.

பசுக்கள் காப்பகம்Gosala
Gosala

பசுக்கள் காப்பகம் (கோசாலை)

Sri Vidyasagar Gosala

ஸ்ரீ ஜினாய நம

Shri Jinaya Namah

Gosala
50+ Cows & Bulls

ஸ்ரீ வித்யாஸாகர் பசுக்கள் காப்பகம்

Sri Vidyasagar Cows Shelter

ஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையத்தின் முக்கியமான சேவைப் பணிகளில் ஒன்றாக ஸ்ரீ வித்யாஸாகர் பசுக்கள் காப்பகம் (கோசாலை) செயல்பட்டு வருகிறது.

Sri Vidyasagar Gosala is one of the important service activities of Sri Vishakhacharya Tapo Nilayam.

🐄 பசுக்கள் மற்றும் காளைகளின் பராமரிப்பு

🐄 Care of Cows and Bulls

1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பசுக்கள் காப்பகம், ஸ்ரீ வித்யாஸாகர் மகராஜ் அவர்களின் பெயரில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

Started in 1998, this cows shelter continues to be maintained in the name of Sri Vidyasagar Maharaj.

இங்கு 50-க்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் காளைகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

More than 50 cows and bulls are protected and cared for here.

அவற்றிற்கு தேவையான உணவு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

Started in 1998, this Gosala continues to be maintained in the name of Sri Vidyasagar Maharaj.

More than 50 cows and bulls are protected and cared for here, with food, safety and ongoing care provided.

🌿 உயிர்களிடம் கருணை

🌿 Compassion Towards Living Beings

உயிர்களிடம் அன்பும் கருணையும் கொண்டு அவற்றைப் பாதுகாப்பது ஜின தர்மத்தின் முக்கியமான அறநெறிகளில் ஒன்றாகும்.

Protecting living beings with love and compassion is one of the important ethical principles of Jain Dharma.

அந்த அடிப்படையில், பசுக்கள் மற்றும் காளைகளைப் பாதுகாத்து பராமரிக்கும் சேவைப் பணியை தபோ நிலையம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Protecting living beings with love and compassion is an important ethical principle of Jain Dharma.

Based on this principle, Tapo Nilayam continues the service of protecting and caring for cows and bulls.

🙏 தர்மச் சேவையில் பங்களிக்கலாம்

🙏 Contribute to Dharma Service

பசுக்கள் காப்பகத்தின் பராமரிப்பு மற்றும் சேவைப் பணிகளுக்கு பக்தர்கள், சிராவகர்கள் மற்றும் தர்ம அன்பர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கலாம்.

Devotees, Shravakas and Dharma supporters may contribute according to their ability towards the maintenance and service of the cows shelter.

கோசாலை சேவைக்கான நன்கொடைகள் மற்றும் பிற விவரங்களுக்கு தபோ நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Devotees, Shravakas and Dharma supporters may contribute according to their ability towards Gosala maintenance and service.

Contact Tapo Nilayam for Gosala donations and other service details.

🪷 எங்கள் சேவை

🪷 Our Service

உயிர்களைப் பாதுகாப்போம்
கருணையை வளர்ப்போம்
தர்மச் சேவையில் இணைவோம்

Protect living beings
Grow compassion
Join Dharma service

முதியோர் ஆன்மிக இல்லம்Spiritual Home
Spiritual Home

முதியோர் ஆன்மிக இல்லம்

Spiritual Home

ஸ்ரீ ஜினாய நம

Shri Jinaya Namah

Spiritual Home
Under Process

ஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையத்தில், முதியோர் தங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியை அமைதியான ஆன்மிகச் சூழலில் கழிக்கவும், ஜின தர்மம் மற்றும் ஆன்மிகச் சிந்தனைகளில் ஈடுபடவும் உதவும் வகையில் முதியோர் ஆன்மிக இல்லம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

A Spiritual Home is currently being developed at Sri Vishakhacharya Tapo Nilayam to help elders spend the later part of their lives in a peaceful spiritual environment and engage in Jain Dharma and spiritual reflection.

🪷 ஆன்மிகச் சூழல்

🪷 Spiritual Environment

அமைதியான சூழலில் பூஜை, பிரவசனம், ஸ்வாத்யாயம் மற்றும் ஆன்மிகச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

The main objective is to create an opportunity to engage peacefully in worship, discourses, Svadhyaya and spiritual activities.

🌿 ஒரு சேவை முயற்சி

🌿 A Service Initiative

முதியோருக்கு தேவையான ஆதரவையும், ஆன்மிகச் சூழலையும் வழங்கும் வகையில் இந்த ஆன்மிக இல்லம் உருவாக்கப்பட்டு வருகிறது.

The Spiritual Home is being developed to provide elders with the necessary support and a spiritual environment.

இது தற்போது நடைபெற்று வரும் பணியாகும் (Under Process).

The Spiritual Home is being developed to provide elders with necessary support and a spiritual environment.

This is currently an ongoing project (Under Process).

🙏 உங்கள் ஆதரவு

🙏 Your Support

இந்த ஆன்மிக இல்லத்தின் பணிகள் நிறைவேற, தர்ம அன்பர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவு முக்கியமானதாகும்.

Support from Dharma well-wishers and donors is important for completing this Spiritual Home.

இத்திட்டத்திற்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க விரும்புவோர் தபோ நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Support from Dharma well-wishers and donors is important for completing this Spiritual Home.

Those wishing to contribute may contact Tapo Nilayam.

அமைதியான வாழ்வு • ஆன்மிகச் சிந்தனை • தர்ம நெறி

Peaceful Living • Spiritual Reflection • Dharma Values

அருகிலுள்ள சமணத் திருத்தலங்கள்Nearby Jain Temples
Nearby Jain Temples

அருகிலுள்ள சமணத் திருத்தலங்கள்

Nearby Jain Temples

ஸ்ரீ ஜினாய நம

Shri Jinaya Namah

ஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு பழமையான சமணத் திருத்தலங்கள் மற்றும் ஜினாலயங்கள் அமைந்துள்ளன.

Several ancient Jain sacred sites and Jinalayas are located in the areas surrounding Sri Vishakhacharya Tapo Nilayam.

தபோ நிலையத்திற்கு வருகை தரும் யாத்ரிகர்கள் மற்றும் பக்தர்கள் அருகிலுள்ள இத்திருத்தலங்களையும் தரிசித்து ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளலாம்.

Several ancient Jain sacred sites and Jinalayas are located in the surrounding areas of Sri Vishakhacharya Tapo Nilayam.

Pilgrims and devotees visiting Tapo Nilayam may also visit these sacred places as part of their spiritual journey.

🛕 வங்காரம்

Vangaram

🛕 பொன்னூர்

Ponnur

🛕 திரைல்கோயில்

Thrailkovil

🛕 மேலும் 10-க்கும் மேற்பட்ட சமணத் திருத்தலங்கள்

🛕 More than 10 additional Jain sacred sites

இப்பகுதிகளில் அமைந்துள்ள சமணத் திருத்தலங்கள், தமிழகத்தின் சமண மரபு மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் முக்கியமான இடங்களாக விளங்குகின்றன.

These Jain sacred sites are important places reflecting the Jain tradition and spiritual heritage of Tamil Nadu.

🪷 ஆன்மிகப் பயணம்

🪷 Spiritual Journey

தரிசனம் • ஆன்மிகம் • வரலாறு • சமணப் பாரம்பரியம்

Darshan • Spirituality • History • Jain Heritage

தொடர்புக்குContact
Contact

📞 தொடர்புக்கு

Contact Tapo Nilayam

📞 தொடர்பு எண்கள்

📞 Contact Numbers

தபோ நிலையம்: +91-9444138289 / +91-8148318725

Tapo Nilayam: +91-9444138289 / +91-8148318725

அறங்காவலர்: +91-9489955465

Trustee: +91-9489955465

பிரம்மசாரி: +91-6382292812

Brahmachari: +91-6382292812

🪷

தர்மத்திற்கு அளிப்போம் • உயிர்களைக் காப்போம் • அறிவைப் பரப்புவோம் • ஆன்மிகச் சேவையில் இணைவோம்

Give to Dharma • Protect living beings • Spread knowledge • Join spiritual service

Call Tapo Nilayam
📞 Contact